சேல்ஸ் மேனை பட்டா கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பி கைது

சுங்ககேட் டாஸ்மாக் பாரில், சேல்ஸ் மேனை பட்டா கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-20 13:54 GMT

சுங்ககேட் டாஸ்மாக் பாரில், சேல்ஸ் மேனை பட்டா கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பி கைது. கரூர் மாவட்டம், குளித்தலை, சுங்ககேட் பகுதியில் அரசு மதுபான கடையில் பார் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் சிக்கப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதர் அந்த பாரில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு, அருகிலுள்ள தெற்கு மணத்தட்டை பகுதியைச் சேர்ந்த பிரதீப், சேது சகோதரர்கள் இருவரும் அந்த பாரில் மது அருந்த சென்றுள்ளனர். மது அருந்திய இருவரும் பணம் கொடுப்பது தொடர்பாக சேல்ஸ்மேன் ஸ்ரீதரிடம் தகறாரில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரதீப், சேது ஆகிய இருவரும் வீட்டிற்கு சென்று பட்டா கத்தியை எடுத்து கொண்டு மீண்டும் பாருக்கு வந்து ஸ்ரீதரை வெட்டியுள்ளார். ஸ்ரீதர் உயிருக்கு பயந்து ஓடிய நிலையில், பாரினை அடித்து நொறுக்கிதோடு, அவரை விடாமல் துரத்திய அவர்கள் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளனர்.

அப்போது அருகில் உள்ள சுங்ககேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளிகளை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாக்கத்தி அவரது கையினையும் கிழித்ததில் விரல்களில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மற்ற காவலர்கள் இருவரையும் மடக்கி பிடித்து, கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு போராடிய ஸ்ரீதரை மீட்ட காவல்துறையினர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் குளித்தலை பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள அண்ணன் தம்பி இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே சுங்ககேட் பாரில் தகராறில் ஈடுபட்டு, பாரினை அடித்து நொறுக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குளித்தலை காவல்துறையினர்

Tags:    

Similar News