ராமேஸ்வரத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை

ராமேஸ்வரத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை துவக்குவது குறித்த நிருபர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

Update: 2024-03-02 11:45 GMT

பிஎஸ்என்எல் 4ஜி ராமேஸ்வரத்தில் துவக்க உள்ளனர். இதற்கான நிருபர்கள் சந்திப்பு கூட்டம் இன்று மார்ச் 2ல் நடைபெற்றது. இதில் முதன்மை பொது மேலாளர், P.லோகநாதன் ஐ டி எஸ், BSNL. மதுரை-625002. அவர்கள் கூறியது என்னவென்றால் BSNL ன் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக காப்பர் வயர் லைன் சேவையை ஃபைபராக மாற்றுவதும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மதுரை வணிகப் பகுதி மதுரை, காரைக்குடி மற்றும் விருதுநகர் செயல்பாட்டு பகுதி உள்ளடக்கியது.

BSNLஅதன் ஃபைபர் டு தி ஹோம் (FTTH) தொழில் நுட்பத்தின் ஃபைபர் இணைய சேவைகளில் புரட்சியை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. சேவையானது 30 Mbps முதல் 300 Mbps வரையிலான அதிவேக அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது, அத்துடன் அளவில்லா வாய்ஸ் அழைப்புகள் மற்றும் சிறந்ததரமான சேவைகளை (QoS) வணிக நிறுவனம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்குகிறது. வேல்யூ ஆடட் சேவைகளாக ழுவுவு சேனல்களை, அனைத்து பயனர்களுக்கும் வழங்குவதின் மூலம் டிஜிட்டல் அனுபவத்தை BSNL உறுதி செய்கிறது.

சுமார் 4.6 லட்சம் குவுவுர் இணைப்புகளைக் கொண்டு, BSNL தொலைதூர கிராமப் பகுதிகள் மற்றும் சவாலான நிலப்பரப்புகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தனது நெட்வொர்க்கை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது. டிஜிட்டல் மயமாக்குதல் என்ற தொலைநோக்கு பார்வையுடன், வேலூர் வணிகப் பகுதியில் "BSNL மிஷன் மோட் ஃபைபரைசேஷன்" திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முன்னோடி முயற்சியானது தற்போதைய அனைத்து காப்பர் லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளை ஆறு மாத காலத்திற்குள் அதிவேக ஃபைபர் இணைப்புகளுக்கு மாற்ற இருக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மதுரை வணிகப் பகுதியில் உள்ள அனைத்து காப்பர் தரைவழி இணைப்புகளும் ஃபைபர் ஆக மாற்றப்படும், மதுரை வணிகப் பகுதி முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய சேவை மற்றும் பழுதற்ற இணைப்பை உருவாக்கும்.

இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் ஒரு இலவச ஆப்டிகல் ஃபைபர் மோடத்தைப் பெறுவார்கள். மற்றும் இன்ஸ்டலேஷன் கட்டணங்கள் ஏதும் விதிக்கப்படாது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய தொலைபேசி எண்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த ஃபைபர் நெட்வொர்க்கிற்கு மாற்றப்பட்ட சேவை, பழுதற்ற சேவையை உறுதிப்படுத்துகிறது. காப்பர் சேவையிலிருந்து ஃபைபர் சேவைக்கு மாறுவதன் மூலம், காப்பர் பிராட்பேண்ட் சேவையில் வழங்கப்பட்ட முந்தைய 10 Mbps உடன் ஒப்பிடும்போது, இணையவேகம், குறைந்தபட்சம் 30 Mbps முதல் அதிகபட்சம் 300 Mbps வரை கணிசமாக மேம்படும். கூடுதலாக, வாய்ஸ் சேவைகள் அனைத்து FTTH டேட்டா திட்டங்களுடனும் இலவசமாக சேர்க்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் இந்தியா முழுவதும் வாய்ஸ் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

BSNL,FTTH திட்டங்கள் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப தீர்வுகளை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வேகம் உள்ள திட்டங்கள், OTT மற்றும் Static IP போன்ற கூடுதல் சேவைகளை வழங்குகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் VOIP (வாய்ஸ்) சேவை வழங்கப்படுகிறது. விருப்பத்தேர்வுகள் 30Mbps &.399/- 300 Mbps &.1799/- வரை உள்ளன. ரூ.599/-க்கு மேல் உள்ள FTTH மாதாந்திர திட்டங்களுக்கு Static IP குறைந்த கட்டணத்தில் கிடைக்கும். குறைந்த செலவில் திட்டங்கள் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு, கிராமப்புறங்களில் ரூ.249 மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.299 முதல் 10 Mbps வேகத்துடன் கூடிய திட்டங்கள் உள்ளன.

இதில் அளவில்லா VOIP (வாய்ஸ்) சேவைகூடுதலாக வழங்கப்படுகிறது. BSNL மதுரை வணிகப் பகுதி, அதன் மதிப்பிற்குரிய காப்பர் வாடிக்கையாளர்களை, அருகிலுள்ள BSNL அலுவலகம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்று, தங்கள் லேண்ட்லைன் சேவையை ஃபைபராக மேம்படுத்துவதற்கான பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அல்லது, BSNL கட்டணமில்லா அழைப்பு மையம் 1800-4444 ஐத் தொடர்பு கொள்ளலாம். மேலும், BSNL தனது BSNL FTTH ஃபிராஞ்சைஸீகளை காப்பர் வாடிக்கையாளர்களை அணுகவும், அவர்கள் ஃபைபருக்கு மாறுவதை எளிதாக்கவும் அங்கீகரித்துள்ளது.இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News