நகராட்சி வரிகட்டாத பிஎஸ்என்எல் நிறுவனம் – அதிரடி காட்டிய அதிகாரிகள்

திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள bsnl அலுவலகம் வரி செலுத்தாத காரணத்தால் அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டி சீல் செய்தனர்.

Update: 2024-03-07 14:05 GMT

பிஎஸ்என்எல் அலுவலகம் சீல் வைப்பு

திருச்செங்கோடு நகராட்சியில் வரி வசூல் 10 கோடிக்கு மேல் பாக்கி உள்ளதால் நகராட்சி ஆணையாளர் சேகர் தலைமையில் முறையான வரி கட்டாத அரசு நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.மத்திய அரசு நிறுவனமான சந்தைபேட்டை பகுதியில் அமைந்துள்ள bsnl அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரி தமிழ் பாக்கி வைத்துள்ளார்கள்.

நகராட்சி சார்பில் பலமுறை வலியுறுத்தியும் வரி கட்டாததால் இன்று ஆணையாளர் சேகர் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது, மேலும் தனியார் கட்டிடங்களும் தொழில் வரி கட்டாததால் பூட்டி சீல் வைக்க பட்டது மத்திய அரசின் அங்கமான பிஎஸ்என்எல் நிறுவனம் நகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,

Tags:    

Similar News