மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நடைபெற்ற மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Update: 2024-01-21 07:06 GMT

மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம்

அறந்தாங்கி அருகே உழவர் திருநாளை முன்னிட்டு திருவாப்பாடி கிராமங்கள் சார்பில் 69 ஆண்டாக குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, நடுமாடு, கரைச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என்று நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற குதிரை மற்றும் மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு, குத்துவிளக்கு, செல்போன் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தன.
Tags:    

Similar News