திருமயம் அருகே பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம் அருகே பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2024-01-17 16:27 GMT

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.மொத்தம் 36ஜோடி மாட்டு வண்டிகள்  பங்கேற்ற பந்தயம் 2சுற்றுகளாக நடைபெற்றது.

பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கும் வெற்றிகோப்பையும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.இந்த பந்தயத்தில் மதுரை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி , மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாட்டிற்கு கடியாபட்டியிலிருந்து ராயவரம் வரை போக வர 12 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டு வகையில் 13 ஜோடிகளும் ,9 கிலோ மீட்டர்  தொலைவிற்கு சிறிய மாட்டு வகையில் நடைபெற்ற போட்டியில் 25ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகள் தான்தான் வெற்றி பெறவேண்டும் என்ற வெறியுடன்‌ ஒவ்வொரு வண்டியையும் முந்திச்சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது.போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  சாலையின் இருபுறமும் நின்று போட்டியை கண்டு ரசித்தனர்.

பெரிய மாட்டிற்கான போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.சிறிய மாட்டிற்கான போட்டியை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொடங்கி வைத்தார் ‌முன்னாள் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் சுப்புராம்‌ கலந்துகொண்டார்.மாட்டு வண்டி போட்டி பாதுகாப்பு பணிகளை பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர்  அப்துல்ரகுமான் செய்திருந்தார்.

Tags:    

Similar News