அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு

வேளாங்கண்ணி அருகே செருதூர் பாலத்தடி பகுதியில் அடுத்துடுத்த 3 வீடுகளில் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-20 02:05 GMT

காவல் நிலையம் 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் பாலத்தடி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்த பகுதியில் உள்ள நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் வீரமணி,இன்பன்ட்,எட்வின் சந்தோஷ் ஆகிய வீடுகளில் அடுத்தடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த இரண்டு சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர் காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் திருடு போன வீடுகளை விசாரணை நடத்தி வீட்டில் ரத்தக்கரை படிந்து இருந்ததையும் ஆய்வு செய்தார் நாகை அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நள்ளிரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags:    

Similar News