பூட்டிய வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை

மனாமதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - போலீசார் விசாரணை

Update: 2024-07-05 04:57 GMT

கொள்ளை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் கொத்தனார் முத்து, இவரது வீடு வைகை ஆற்றங்கரையையொட்டி உள்ளது. கீழ்ப்பகுதியில் உறவினர்கள் குடியிருக்கின்றனர். மாடியில் முத்து குடியிருக்கிறார். அவர் குடும்பத்தினருடன் சொந்த ஊரான சின்னக்கண்ணுார் சென்று வீடு திரும்பிய நிலையில் கொள்ளையர்கள் இரும்புக் கம்பியால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 65 சவரன் நகைகள், பூஜை அறையிலிருந்த 17,000 ரூபாய் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு, 29 லட்சம் ரூபாய். தடயவியல் நிபுணர்கள் வீட்டில் தடயங்களை சேகரித்து வரும் நிலையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News