தீயில் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு.

Update: 2024-01-26 11:50 GMT

வாலிபர் சடலம் 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ரெங்கப்பநாயக்கன்பட்டி அருகேயுள்ள குன்னூத்துப்பட்டியைச் சோந்த பெரியகருப்பன் மகன் சூரியகுமாா் (24). இவா், வத்தலகுண்டில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். நிதி நிறுவனம் சாா்பில் மகளிா் குழுக்களிடம் வசூல் செய்த தொகையை நிதி நிறுவனத்துக்குச் செலுத்துவது தொடா்பாக சூரியகுமாருக்கு பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.வீட்டிலிருந்து வழக்கம் போல வேலைக்குச் சென்ற சூரியகுமாா், வீட்டுக்குத் திரும்ப வரவில்லை. இது குறித்து சூரியகுமாரின் தந்தை பெரியகருப்பன், விருவீடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.இந்த நிலையில், தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி சீவல் கரடு பகுதியில் தீயில் எரிந்து கருகிய நிலையில் சூரியகுமாரின் சடலம் கிடந்தது. தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.
Tags:    

Similar News