சுவர் ஒட்டியால் பரபரப்பு

ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவரை பதவியை விட்டு நீக்கு என்ற சுவர் ஒட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-01 11:16 GMT
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர பகுதியில் பேருந்து நிலையம், அண்ணா தெரு, உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மாவட்ட தலைவர் சண்முக நாதனை நீக்கக்கோரி போஸ்டர் ஒட்டி உள்ளனர். போஸ்டர் ஒன்றில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு உழைக்காமல் எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்த நமது கட்சி நிர்வாகிகளை மாற்றுக் கட்சிக்கு ஓட வைத்த சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முக நாதனை பதவியை விட்டு நீக்கு என்றும் மற்றொரு போஸ்டரில் பிஜேபியின் பணத்தை கொள்ளையடித்த மாவட்ட தலைவர் சண்முகநாதன் பதவியை விட்டு நீக்கு என்றும் அச்சிடப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதால் அக்கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவினர் சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தெறிந்து வருகின்றனர்.
Tags:    

Similar News