சாமி தரிசனம் செய்து ஜல்லிக்கட்டு பார்வையிட்ட சி.விஜயபாஸ்கர்!

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூச்செரிதல் விழாவில் சாமி தரிசனம் செய்து ஜல்லிக்கட்டு பார்வையிட்ட சி.விஜயபாஸ்கர்!

Update: 2024-02-25 09:47 GMT
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூச்செரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி விஜயபாஸ்கர் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு களித்தார். மேலும் அமைச்சரின் ஜல்லிக்கட்டு காளையான கொம்பன் காலையும் இதில் பங்கு பெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சக்தி தலங்களில் மிகவும் பிரதிசிப்பெற்றதுமான திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழாவை பூச்சொரிதலை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே உள்ள கவிநாடு கண்மாயில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது இந்நிலையில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர். சி .விஜயபாஸ்கர் திருவப்பூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து ஜல்லிக்கட்டு போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார் இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் காளைகளை பிடித்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் தனது சொந்த செலவில் பரிசுகளை வழங்கினார். இதனையடுத்து அமைச்சரின் சொந்தக்காளையான கொம்பன் காளை களத்தில் இறக்கிவிடப்பட்டது அது யாரிடம் சிக்காமல் சென்று வெற்றி பெற்றது.
Tags:    

Similar News