கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற அழைப்பு

நத்தம் தாலுகாவில் ஜமாபந்தி வரும் ஜுன் 18-ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

Update: 2024-06-15 11:09 GMT

நத்தம் தாலுகாவில் ஜமாபந்தி வரும் ஜுன் 18-ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.


நத்தம் தாலுகாவில் ஜமாபந்திவரும் ஜுன் 18-ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நத்தம் தாலுகா அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைத்து துறை சார்ந்த தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வட்டாட்சியர் சுகந்தி, மண்டல துணை வட்டாட்சியர் சந்தரபாண்டியன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News