ஒப்பந்த அடிப்படையில் மருத்துவப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2024-07-03 10:09 GMT

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்ட சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார பணியாளர், செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை ஊழியர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் இயங்கும் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையம், நகர் நல மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய சுகாதார ஊழியர், செவிலியர், துணை செவிலியர், மருத்துவ மனை ஊழியர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஒலிப்பதிவாளர், நுண்கதிர் வீச்சாளர், புள்ளிவிபர குறிப்பாளர், மருத்துவமனை ஊழியர் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் ஜூலை 15 மாலை 5:00 மணி வரவேற்கப்படுகிறது.

பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. விண்ணப்பத்தை https:/sivaganga.nic.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர மாவட்ட சுகாதார அலுவலகம், மருத்துவ இணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவண நகலுடன் மாவட்ட சுகாதார அலுவலகம், இணை இயக்குனர் (மருத்துவம்) அலுவலகத்தில் ஜூலை 15 மாலை 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News