கோயிலில் வழங்கப்படும் சிறப்பு முன்னுரிமை டிக்கெட் ரத்து !

பழனியில் மக்களவை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால் கோயிலில் வழங்கப்படும் சிறப்பு முன்னுரிமை டிக்கெட் வழங்கப்பட மாட்டாது திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-03-30 06:22 GMT

பழனி முருகன் கோயிலில்

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வரும் நிலையில் பக்தர்கள் அதிகப்படியாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால் கோயிலில் வழங்கப்படும் சிறப்பு முன்னுரிமை டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News