மீண்டும் எம்ஜிஆர் ஆன கேப்டன்

மீண்டும் எம்ஜிஆர் ஆன இதய தெய்வம் கேப்டன் என்ற புதிய போஸ்டரால் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-17 10:12 GMT
மீண்டும் எம்ஜிஆர் ஆன இதய தெய்வம் கேப்டன் -புதிய போஸ்டரால் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பெரும் பரபரப்பு! விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இதய தெய்வம் கேப்டன் அவர்களுக்கு இதய அஞ்சலி என்றும் மறைந்த கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலி செலுத்திய அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் மற்றும் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தும் புகைப்படம் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. மேலும் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தலில் எதிரொலிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த போஸ்டர் விருதுநகர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் 71 வது வயதில் உடல் நலக்குறைவால் கடந்த 2023 டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பின்னர் இவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இதய தெய்வம் கேப்டன் அவர்களுக்கு இதய அஞ்சலி என்றும் மறைந்த கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலி செலுத்திய அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் மற்றும் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தும் புகைப்படம் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News