நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து - ஒருவர் படுகாயம் !

கரூரில்,நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-04-10 08:48 GMT

வழக்குப்பதிவு

நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, லாலாபேட்டை, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் சூரியகுமார் வயது 41. இவர் ஏப்ரல் 6-ம் தேதி மாலை 6 மணி அளவில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, கோவை- கரூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

இவர் அஜந்தா தியேட்டர் அருகே நடந்து சென்ற போது, கரூர், தோரணக்கல்பட்டி அருகே உள்ள நாயக்கர் தெருவை சேர்ந்த பொன்ராஜ் வயது 38 என்பவர், வேகமாக ஓட்டி வந்த கார், நடந்து சென்ற சூர்யகுமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இடது காலில் பலத்த காயம் அடைந்த சூர்யகுமாரை, கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சூர்யகுமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய பொம்முராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல்துறையினர்.

Tags:    

Similar News