திருக்காம்புலியூரில் மூதாட்டி மீது கார் மோதி விபத்து.

திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.;

Update: 2024-06-12 16:23 GMT

திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்து. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சரோஜா வயது 58. இவர் ஜூன் 10ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், கோவை - கரூர் சாலையில் உள்ள திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த, கரூர், வெண்ணமலை, பூர்ணிமா கார்டன் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் பிரவீன் வயது 32 என்பவர் ஓட்டி வந்த கார், நடந்து சென்ற சரோஜா மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் வலது காலில் பலத்த காயமடைந்த சரோஜாவை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம்,கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரோஜா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரவீன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News