பைக் மீது கார் மோதிய விபத்து

அம்மையகரம் பஸ் நிறுத்தம் அருகே பைக் மீது கார் மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2024-02-27 11:10 GMT

அம்மையகரம் பஸ் நிறுத்தம் அருகே பைக் மீது கார் மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.     

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த லட்சுமணபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் முருகன், 44; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு ஸ்பிளண்டர் பைக்கில், அம்மையகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். 8:30 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்ட முருகன் அம்மையகரம் பஸ் நிறுத்தம் அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது, சேலம் நோக்கிச் சென்ற ஸ்கார்பியோ கார், முருகன் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News