டீக்கடைக்குள் புகுந்த கார் - ஜோதிடர் பலி

திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரத்தில் டீ குடிக்க நின்றிந்தவர் மீது கார் மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். கடைக்குள் கார் புகுந்ததில் காயமடைந்த டீக்கடைகாரர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-15 04:53 GMT

ஐயாக்கண்ணு

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, உமாமகேஸ்வரபுரம் நடுவக்கரை பகுதியைச் சேர்ந்த சேகரன் (50). இவர் கோவிந்தபுரம் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப் அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். சீர்காழி ஆலவேலி சேமங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஐயாக்கண்ணு (55) ஜோதிடர். கடையில் டீ குடிக்க நின்று கொண்டிருந்தார். அப்போது ஆடுதுறையிலிருந்து வந்த கார் ஒன்று ஜோதிடர் மீது மோதி தூக்கி வீசியதோடு டீக்கடைக்குள்ளும் புகுந்தது. இதில் ஜோதிடர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

டீக்கடை நடத்தி வந்த சேகரன் படுகாயம் அடைந்தார். டீக்கடையின் முன்புறம் சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த திருவிடைமருதூர் போலீசார் இறந்த ஐயாக்கண்ணு உடலை கைப்பற்றி திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் படுகாயம் அடைந்த சேகரன் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த ஆடுதுறை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் பவித்ரன் (25) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News