கடத்த முயன்ற ஏலக்காய்- பறிமுதல்

ராமநாதபுரம் இலங்கைக்கு நாட்டு படகில் கடத்த பட்ட ஏலக்காய் பறிமுதல்: மண்டபம் கடலோர காவல் படை பறிமுதல் செய்து நடவடிக்கை.

Update: 2024-01-30 09:03 GMT

கடத்த முயன்ற ஏலக்காய்- பறிமுதல்

ராமநாதபுரம் பாம்பன் அருகே குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நாட்டு படகில் கடத்த முயன்ற 1.45லட்சம் எலக்காய் மண்டபம் மரைன் போலிசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்துள்ள குந்துகால் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா எண்ணெய், கிரிஸ்டல் மெத்தாம் பேட்டமைன் (ஐஸ் போதை பொருள்), சமையல் மஞ்சள், செருப்பு, கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சமீப காலமாக பிடிபட்டு வருகிறது. இதைதொடர்ந்து பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை பகுதியை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, இந்திய கடலோர காவல் படை, உளவுத்துறை, மரைன் போலீஸ் என பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,நேற்று நள்ளிரவு மன்னார் வளைகுடா கடல் வழியாக நாட்டுப்படகில் எலக்காய் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குந்துகால் மீன்பிடி துறைமுகப் பகுதியில் மண்டபம் மரைன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது குந்துகால் மீன் பிடி துறைமுகம் பகுதியில் மூட்டை ஒன்று மரைன் போலீசாரை கண்டதும் 3 நபர்கள் விட்டு விட்டு தப்பித்தனர். இதனால் சந்தேமடைந்த மரைன் போலீசார் அந்த மூட்டையை சோதனை செய்த போது அதில் 43 கிலோ ஏலக்காய் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். இதனையடுத்து ஏலக்காய் மூட்டையை கைப்பற்றிய மரைன் போலீசார் ஏலக்காய் மூட்டையெ இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைபற்றபட்ட வலி ஏலக்காய் மூட்டையை ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மதிப்பு ரூ.1.45 லட்சம் இருக்கும் எனவும், இந்த மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர். குந்துகால் கடற்கரை இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தும் முக்கிய கேந்திரமாக மாறியுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் இடையே கலக்கத்தைக எற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News