கார்மோதி மாணவன் உயிரிழப்பு
சாலையின் ஒரத்தில் நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் பலி மற்றொரு மாணவன் படுகாயம்.
Update: 2024-02-06 07:06 GMT
அரியலூர் மாவட்டம் ராயம்புரம் கிராமத்தில் பள்ளி முடித்து சாலையோரமாக மாணவர்கள் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளனர். இந்நிலையில் செந்துறை நோக்கி சென்ற கார் மோதியதில் 10 ஆம் வகுப்பு மாணவன் வாசு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மணிகண்டன் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதனையறிந்த மாணவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது விபத்து ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதனையறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.