தென்காசியில் 324 பேர் மீது வழக்கு

தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 324 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-02-21 03:25 GMT
வாகன சோதனை 
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் நேற்று தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 12 இடங்களில் காவல் துறையினர் நடத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News