மது போதையில் வாகனம் ஓட்டிய 7 பேர் மீது வழக்கு !

மது போதையில் பைக் ஓட்டிய 7 பேர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-03 04:47 GMT

வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திங்கள்நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மது போதையில் தனித்தனியாக பைக்குகளில் வந்த ஜெனிஸ் (26) பிரசாத் (29) கிருஷ்ணராஜன் (42) முரளி (44) அஜிஸ் (26) ஜெயன் (38)ஆகிய ஏழு பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்கள் மது போதையில் இருந்தது உறுதியானது. இதையடுத்து பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் மது போதையில் பைக் ஓட்டிய 7 பேர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மது போதையில் பைக் ஓட்டிய 7 பேர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News