சேலம் அருகே அரிவாளை காட்டி பெண்ணை மிரட்டிய எஸ்.எஸ்.ஐ மீது வழக்கு

Update: 2023-12-01 16:24 GMT


எஸ்.எஸ்.ஐ மீது வழக்கு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஓமலூர் அருகேயுள்ள கருப்பணம்பட்டியை சேர்ந்தவர் முருகன்.இவரது  மனைவி சந்திரா (49). விவசாயியான இவர், ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் செம்மாண்டபட்டியில் உள்ள நிலத்திற்கு சென்று வர அனைத்து நிலத்தை சேர்ந்தவர்களும் பாதை விட்டுள்ளனர். அதன் வழியாக டிராக்டரை கொண்டு சென்று உழவு பணிகள் செய்து வந்தனர். அப்போது, அங்கு வந்த பக்கத்து நிலத்தின் உரிமையாளரும், சிறப்பு எஸ்ஐயுமான பச்சியண்ணன், பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டி, டிராக்டர் வெளியே வர முடியாதபடி தடை ஏற்படுத்தினார். இதுகுறித்து கேட்டபோது தன்னை பச்சியண்ணன், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் எஸ்எஸ்ஐ பச்சியண்ணன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News