வாலிபரை தாக்கிய விவசாயி மற்றும் இருவர் மீது வழக்கு

மாரண்டஅள்ளி அருகே வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய விவசாயி மற்றும் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-03 12:02 GMT

தர்மபுரி 

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள குஜ்ஜாரஅள்ளியை சேர்ந்தவர் பழனி விவசாயி. இவருடைய மனைவி சத்யா இவர் தனியார் பால் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . பொன்முடி, என்பவரிடம் சத்யா நட்பாக பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பழனி மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் நேற்று பொன்முடி தோட்டத்தில் விளைந்த மரவள்ளிக் கிழங்கை சத்யாவிற்கு கொடுக்க அவருடைய வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த பழனிக்கும், பொன்முடிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்தபழனி தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க முயன்றதால் பொன்முடி தோட்டத்திற்க்கு ஓடினார். ஆனால் பழனி, அவருடைய உறவினர்களான விஜி ,வெங்கடாசலம், முருகன் ஆகியோருடன் சேர்ந்து துரத்தி சென்று பொன்முடியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து இன்று பொன்முடி மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News