முன் விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய தந்தை மகன் மீது வழக்கு....

புறம்போக்கு நிலத்தில் இருந்த மரத்தை வெட்டியதால் முன் விரோதம். பெண்ணை தாக்கிய தந்தை,மகன் மீது வழக்கு பதிவு.

Update: 2024-04-01 10:56 GMT

காவல்துறை

புறம்போக்கு நிலத்தில் இருந்த மரத்தை வெட்டியதால் முன் விரோதம். பெண்ணை தாக்கிய தந்தை,மகன் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புலியூர், பி. வெள்ளாளப்பட்டி அருகே உள்ள ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் மனைவி சத்யா வயது 37. இவரது வீட்டின் அருகாமையில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நந்தகுமார். இவர்கள் இருவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள புறம்போக்கு நிலத்தில் இருந்த மரத்தை வெட்டியது தொடர்பாக இருதரப்பினருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், மார்ச் 30ம் தேதி மாலை 6 மணி அளவில், இது தொடர்பாக மீண்டும் இவர்களுக்குள் எழுந்த தகராறில், ரவிச்சந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரும் சத்யாவை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சத்திய அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பெண்ணை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கிய தந்தை மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Tags:    

Similar News