சங்கராபுரம் அருகே சிறுமி கடத்தல் நாலு பேர் மீது வழக்கு

சங்கராபுரம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-02-29 04:49 GMT

பைல் படம்

சங்கராபுரம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த வரகூர் சேர்ந்த முனுசாமி மகன் நரசிம்மன்,23. இவர் 17 வயது சிறுமியை கடந்த 15ம் தேதி கடத்தி சென்றார். அதற்கு உடந்தையாக அவரது குடும்பத்தினர் வெற்றிச்செல்வன், பாஸ்கர், முனுசாமி ஆகியோர் இருந்தனர். இது குறித்த கேட்ட சிறுமியின் தாயிற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், நரசிம்மன் உள்ளிட்ட 4 பேர் மீது திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News