விக்னேஷ் சங்கர் என்பவரை தாக்கிய எட்டு பேர் மீது வழக்கு பதிவு

பாவாலியில் விக்னேஷ் சங்கர் என்பவரை தாக்கிய எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

Update: 2024-05-25 14:17 GMT

பாவாலியில் விக்னேஷ் சங்கர் என்பவரை தாக்கிய எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.


பாவாலியில் விக்னேஷ் சங்கர் என்பவரை தாக்கிய எட்டு பேர் மீது வழக்கு பதிவு விருதுநகர் பாவாலி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் சங்கர் வயது 23 இவர் சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் கேமரா டிவியில் பணிபுரிந்து வருவதாகவும் இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் பாவாலி கிராமத்தில் உள்ள கோவில் பொங்கலுக்காக கடந்த 23ஆம் தேதி தனது மனைவியுடன் சென்றிருந்ததாகவும் அப்பொழுது அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த பொழுது மோகன் என்பவர் விக்னேஷ் சங்கரின் சட்டையை பிடித்து சண்டையிட்டதாகவும் அருகில் இருப்பவர்கள் சத்தம் போட்டததை அடுத்து அவர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து கோவில் அருகே விக்னேஷ் சங்கர் சென்றபொழுது அங்கு இருந்த பாவாலியை கிராமத்தைச் சார்ந்த மோகன் மொட்டையச்சாமி பிரகாஷ் சுகுணேஷ் மாரீஸ்வரன் குமார் போராளி சப்பானி ஆகிய எட்டு நபர்கள் விக்னேஷ் சங்கரை தாக்கி காயப்படுத்தி கத்தியால் குத்த வந்ததாகவும் இதை அடுத்து அங்கிருந்து அவர் ஓடி உள்ளார்.

அவரை அவர்கள் துரத்தியதாகவும் கூறப்படுகிறது காயமடைந்த விக்னேஷ் சங்கர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News