அனுமதியின்றி பட்டாசு வெடித்த 5 பேர் மீது வழக்கு பதிவு

திருப்பத்தூர் அருகே துவாரில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பிரசாரம் செய்தபோது, அனுமதியின்றி பட்டாசு வெடித்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-04-02 08:13 GMT

திருப்பத்தூர் அருகே துவாரில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பிரசாரம் செய்தபோது, அனுமதியின்றி பட்டாசு வெடித்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ், திருப்பத்தூர் அருகே துவார் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது, அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக துவார் கிராம நிர்வாக அலுவலர் அருணாதேவி அளித்த புகாரின் பேரில் கருமிச்சான்பட்டியைச் சேர்ந்த மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலர் சாத்தையா (43) உள்ளிட்ட 5 பேர் மீது நெற்குப்பை காவல் சார்பு ஆய்வாளர் ஜான் மைக்கேல்ராஜ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்
Tags:    

Similar News