குப்பை கொட்டுவதில் தகராறில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு
மானாமதுரை அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை
Update: 2024-02-10 06:26 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பூமாதேவி(58). இவர் பக்கத்தில் உள்ள சுந்தரேசன் என்பவரது வீட்டின் அருகே குப்பைகளை கொட்டியுள்ளார். இந்நிலையில் அதுகுறித்து ஏற்ப்பட்ட தகராறில் அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக பூமாதேவி அளித்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை போலீசார் சுந்தரேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்