பணம் கேட்டு மிரட்டல் விடுத்த திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு

கரூரில் லாரி மேடு அருகே நின்று கொண்டிருந்த நபரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மூன்று திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-15 11:32 GMT

கரூரில் லாரி மேடு அருகே நின்று கொண்டிருந்த நபரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மூன்று திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கரூர் மாவட்டம், ஆத்தூர், நத்தமேடு, சமத்துவபுரம் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சுகுமார் வயது 44. இவர் மே 13ஆம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட லாரி மேடு பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கரூர் மாவடையான் கோவில் தெருவில் வசித்து வரும் ரம்யா, சில்பா, ஜமுனா ஆகிய மூன்று திருநங்கைகளும் சுகுமாரிடம் பணம் கேட்டு உள்ளனர்.

சுகுமார் பணம் தர மறுத்துள்ளார். இதனால், கோபமடைந்த மூன்று திருநங்கைகளும் சுகுமாரை தகாத வார்த்தை பேசி, மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுகுமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News