நெல்லையில் மீண்டும் மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல்

நெல்லையில் மீண்டும் மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-02 16:33 GMT

காவல் நிலையம்

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அரசு பள்ளியில், மாணவர்களுக்குள் சாதி ரீதியான பிரச்னை எழுந்ததாக கூறப்படும் நிலையில் 2 பேர் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதில் படுகாயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து நாங்குநேரி காவல் ஆய்வாளர் நேரில் விசாரித்து வருகிறார். நாங்குநேரியை தொடர்ந்து நெல்லையில் மீண்டும் மாணவர்கள் இடையேயான சாதிய மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News