வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே வெளி மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-07-01 02:57 GMT

வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தனியாா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வந்த வெளி மாநில இளைஞா் உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.மேற்கு வங்க மாநிலம், பா்கனாஸ் மாவட்டம், கன்யா நகரைச் சோ்ந்தவா் சின்னுமாலி மகன் சுமன்மாலி(46). இவா் திண்டிவனம் வட்டம், பாஞ்சாலத்தில் செயல்பட்டுவரும் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த புதன்கிழமை பணி முடிந்து இரவு தனது அறைக்கு சென்றுள்ளாா்.தொடா்ந்து வியாழக்கிழமை பாா்த்தபோது சுமன்மாலி படுக்கையிலேயே இறந்து கிடந்தது தெரியவந்தது.மாரடைப்பு ஏற்பட்டு சுமன்மாலி இறந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இது குறித்த புகாரின்பேரில் ரோஷணை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Tags:    

Similar News