சிறுமியை கடிக்க துரத்திய தெரு நாயின் சிசிடிவி காட்சி !

பள்ளி சிறுமியை தெரு நாய் துரத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகின்றது.

Update: 2024-03-16 10:05 GMT

சிசிடிவி காட்சி

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86 ஆவது வார்டு சூப்பர் கார்டன் என்ற பகுதியில் சிறுமியை நாய் கடிக்க துரத்திச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மாணவியை தெரு நாய் ஒன்று துரத்திக் கொண்டு வருவதும் நாயிடமிருந்து பயந்து சிறுமி வீட்டுக்குள் ஓடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து சிறுமியை துரத்திய நாயை பெற்றோர்கள் அங்கிருந்து விரட்டி விட்டனர்.மேலும் தெருநாய்கள் சாலையில் நடக்க விடாமல் அச்சுறுத்தி வருவதாகவும் ஒரு சில நாய்களுக்கு வெறி பிடித்து சாலையில் நடக்கும் மக்களை கடிக்க வருவதால் பெரும் சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், நாய்களை பிடிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News