ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

திருடு போன மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-06-27 12:46 GMT

திருடு போன மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 120 செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி, உரிமையாளர்களிடம் செல்போனை ஒப்படைத்தார். அப்போது அவர் பேசுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் யாரேனும் செல்போன் தவறவிட்டால் உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டும். இணைய வழி குற்றங்கள் தொடர்பாக உதவி எண் 1930-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்றார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குணசேகரன், குமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் சீராளன், வெங்கடகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார் (மாவட்ட தனி பிரிவு), கலையரசி (மாவட்ட குற்றப்பிரிவு) மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Tags:    

Similar News