மத்திய, மாநில அரசுகள் அம்பேத்கர் சிலைக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

மத்திய, மாநில அரசுகள் அம்பேத்கர் சிலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பழங்குடியினர் செயற்பாட்டாளர் வக்கீல் அகத்தியன் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2024-04-27 09:51 GMT

வக்கீல் அகஸ்தியன்

முற்போக்கு மாணவர் கழக பழங்குடியி னர் செயற்பாட்டாளர் வக்கீல் அகத்தியன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் தலைவரும், சட்ட மாமேதையுமான அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மத் திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். சமீபகாலமாக அம் பேத்கர் சிலையை உடைப்பதும்,

சேதப்படுத்துவதும், அம் பேத்கரின் உருவப்படத்தை எரிப்பதும், கொச்சைப்படுத்துவ தும் போன்ற ஒழுங்கீன செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக ஒரு சில மாநிலங்களில் இதுபோன்ற செயல்கள் நடந்தேறி வருகிறது. இதுபோன்ற தவறான செயல்கள் நடக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் அம்பேத்கர் சிலையை பாதுகாப்பதோடு, மாவட் டத்திற்கு ஒரு அம்பேத்கர் மணிமண்டபமும் அமைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News