சுகாதார வளாகத்தை திறந்து வைத்த சேர்மன்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் சுகாதார வளாகத்தை சேர்மன் திறந்து வைத்தார்.

Update: 2024-02-24 02:09 GMT

சுகாதார வளாகம் திறப்பு 

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணியில் அமைந்துள்ள 3வது வார்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை நகர்மன்றத் தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன் தலைமையில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் புளியங்குடி நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோனிசாமி, நகராட்சி ஆணையாளர் சுமா மற்றும் நகர்மன்ற உறுப்பினர் காந்திமதி மற்றும் தூய்மை பணியாளர்களும் பொதுமக்களும் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News