சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக எல்லையில் உற்சாக வரவேற்பு

சித்தூர் அருகே பிரச்சாரத்துக்கு வந்து பெங்களூர் சென்ற ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக எல்லையான பச்சூர் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-12-31 05:52 GMT

வரவேற்பு 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தமிழ்நாடு மாநிலம் ஆந்திர மாநிலம் எல்லை பகுதியான பச்சூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தின் முன்னால் முதல்வரும் அம்மாநிலத்தின் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்ப மண்டலத்துக்கு உட்பட்ட மல்லானூர் பகுதியில் பொதுமக்களுக்கு மேடை பிரசாரம் செய்து முடித்தவுடன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநிலத்தின் எல்லை பகுதியான கொத்தூர் சுங்கச்சாவடியின் வழியாக கொத்தூர் பச்சூர் வழியாக அவருடைய கட்சி தொண்டருடன் பெங்களூருக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக அவருடைய கட்சித் தொண்டர்களும் பச்சூர் பகுதியில் உள்ள தொண்டர்களும் ஒன்று கூடி சிறப்பான வரவேற்பு கொடுத்து கிரிடத்தையும் கொடுத்து அவரை மகிழ்வித்தார்கள். இதுபோன்ற வரவேற்புகள் நமது தமிழ்நாட்டில் இதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. எனக்கே பிரமிப்பாக உள்ளது என்று அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது
Tags:    

Similar News