சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தேர் திருவிழா

சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழாவினை முன்னிட்டு தேரை வடம் பிடித்து அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-26 16:23 GMT
திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் வட்டம்,சிவன்மலை அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு தேரை வடம் பிடித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் தொடங்கி வைத்தார். உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், அயலாக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ் குமார், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News