அறநிலையத்துறை பெண் அலுவலர் மாயம்!

தூத்துக்குடி அருகே அறநிலையத்துறை பெண் அலுவலர் திடீரென காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-19 09:45 GMT

காணவில்லை

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் எஸ்வி புரத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மனைவி தமிழ்செல்வி (32). இவர் சேரன்மகாதேவியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் செயல் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் கணவரை பிரிந்து தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் குளத்தூரில் உள்ள தனது தந்தை கருப்பசாமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய விபரம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

Tags:    

Similar News