மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரியில் மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்

Update: 2024-06-20 05:56 GMT
இந்திய நாடாளுமன்ற எதிக்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் காளியம்மாள் தலைமையில் நேற்று காலை 9 மணியளவில் சாலை விநாயகர் கோயிலில் ராகுல்காந்தி பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பகல் 1 மணியளவில் தர்மபுரி அரசு மருத்துவமனை முன்பு மகிளா காங்கிரஸ் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ் ச்சியில் மகிளா காங்கிரஸ் தலைவி காளியம்ம ள் தலைமை வகித்து 200 பேருக்கு உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மோகன், போக்குவரத்துக்கழக தலைவர் மணி மொழி, பொது செயலாளர் தங்கவேல், துணை தலைவர் ராஜாங்கம், விவசாய பிரிவு ம வட்ட தலைவர் மணிகண்டன், சிறுபான்மை பிரிவு முபாரக், சதீஷ், பாலமுருகன், விநாயகம், விஜயா, பூங்கொடி, ரேவதி, சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News