ஆத்தூர்: தனியார் நிறுவனத்தில் தீதொண்டு வார விழா !

ஆத்தூர் அருகே அழகாபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தீத்தெடுப்பு போலி ஒத்திகை பயிற்சி தீர்த்துண்டு வார விழா முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-04-18 12:27 GMT

விழிப்புணர்வு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அழகாபுரம் தனியார் நிறுவனத்தில் தீயணைப்புத் துறையினர் , பணியாளர்கள்,அதிகாரிகள், ஊழியர்களுக்கு தீ தடுப்பு போழி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தனியார் நிறுவனத்தின் வளாகப் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சியின் மூலம் செயற்கையாக, தீயை உருவாக்கி, அதை பாதுகாப்பாக அணைப்பது குறித்தும் , காஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் விளக்கினர்.

நிறுவனத்தின் வளாகப் பகுதி உள்ளிட்ட இடங்களில் திடீரென எதிர்பாராத வகையில் தீ விபத்தில் சிக்கினால் எப்படி தப்பிக்க வேண்டும் தீயை அணைக்க உடனடியாக செய்ய வேண்டியது செய்யக் கூடாதது தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் போன்றவற்றை குறித்து உதவியாளர்கள் பணியாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது அவர்களுக்கு துண்டு பிரசாரமும் தீணிப்புத் துறை சார்பாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News