சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

சாத்தூர் அருகே ராமுத்தேவன் பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2024-02-28 03:35 GMT

ரெங்கம்மாள் 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ராமுத்தேவன் பட்டியில் கடந்த 17ஆம் தேதி வின்னர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு மேல் படுகாயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கம்மாள் (55) என்பவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதனை அடுத்து வின்னர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News