சாத்தூர் : கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்த எம்.எல்.ஏ

சாத்தூர் அருகே நடைபெற்ற கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை சிவகாசி எம்.எல்.ஏ அசோகன் தொடங்கி வைத்தார்

Update: 2024-05-12 05:13 GMT

கண் பரிசோதனை முகாம் 

 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் நாட்டாமை முத்துராஜ் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் சிறப்பு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்த முகாமினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக நாட்டாமை முத்துராஜின்  உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் உடன் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். கோட்டைப்பட்டி பந்துவார்பட்டி தாயில்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என ஏராளமான பயனாளிகள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு கண் கண்ணாடியும் இலவசமாக வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டாமை முத்துராஜ் குடும்பத்தினர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் வந்திருந்த பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

Tags:    

Similar News