கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த முதல்வர்

வடமங்கலத்தில்ரூ. 31.06 கோடியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Update: 2024-02-27 02:10 GMT

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியம் சார்பில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 31.06 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வடமங்கலத்தில் கட்டப்பட்டது. 8.5 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திரிப்பு செய்யப்பட்டு, மலைப்பட்டில் உள்ள கல்குவாரிக்கு அனுப்பும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. பணிகள் நிறைவு அடைந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் முடிவடைந்தவுடன் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்."
Tags:    

Similar News