முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-05 10:34 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நகரக் கழக செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக செய்தி தொடர்புக்குழு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் கோகுல கண்ணன், ஒன்றிய கழக செயலாளர்கள் படாளம் சத்யசாய், பொன் சிவகுமார், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலைமைக் கழக செய்தி தொடர்புக்குழு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா பேசுகையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்கு தான் பிறந்த மண்ணின் மீது குறைந்தபட்ச பாசம், குறைந்தபட்ச இரக்கம், குறைந்தபட்சம் கருணை இருந்திருந்தால் தூத்துக்குடி, சென்னை ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசிடமிருந்து நிதி உதவி பெற்று கொடுத்திருக்கலாம் எனவும் புயல், மழை வெள்ளம் வந்த போது தளபதி மு க ஸ்டாலின் தான் தமிழக மக்களை காப்பாற்றினார்.
Tags:    

Similar News