பெரம்பலூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள்

Update: 2023-12-14 01:58 GMT

மாவட்ட ஆட்சியர் கற்பகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் நகராட்சி மற்றும் பூலாம்பாடி, அரும்பாவூர், லெப்பைக்குடிக்காடு மற்றும் குரும்பலூர் பேரூராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்“ திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி பெரம்பலூர் நகராட்சியில் 1, 2, 3, 4, 12 மற்றும் 13 ஆகிய வார்டு பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் டிசம்பர் 18ம் தேதி அன்று வடக்குமாதவி ரோட்டில் அமைந்துள்ள NSK மஹாலிலும், வார்டு எண்கள். 7, 8, 9, 10, 11 மற்றும் 21 இல் குடியிருக்கும் பொதுமக்கள் டிசம்பர் 19ம் தேதி அன்று துறைமங்களம் J.K. மஹாலிலும், வார்டு எண்கள். 5, 6, 18, 19, மற்றும் 20 இல் குடியிருக்கும் பொதுமக்கள் டிசம்பர் 20ம் தேதி அன்று சங்குப்பேட்டை அருகில் உள்ள முத்துக்கோனார் திருமண மண்டபத்திலும், மற்றும் வார்டு எண்கள். 14, 15, 16, மற்றும் 17 இல் குடியிருக்கும் பொதுமக்கள் டிசம்பர் 21ம் தேதி அன்று துறையூர் ரோடு, அருகில் உள்ள முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்திலும் நடைபெறுகிறது.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நான்கு கட்டமாக நடைபெறவுள்ளதால், தங்கள் பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் இச்சிறப்பு முகாமில் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான, அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் டிசம்பர் - 27ம் தேதி அன்று அரும்பாவூர், அ.மேட்டூரில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்திலும், பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் டிசம்பர் - 28ம் தேதி அன்று பூலாம்பாடி, சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்திலும், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் டிசம்பர் - 29ம் தேதி அன்று குரும்பலூர், மெயின் ரோடு, பங்காரு அம்மாள் ரெட்டியார் திருமண மண்டபத்திலும் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் டிசம்பர் - 30ம் தேதி அன்றும் லெப்பைக்குடிக்காடு, மெயின் ரோடு, கிழக்கு பள்ளி வாசல் மஹாலில் நடைபெறும் இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News