தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரியவகை நோயில் இருந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகள்

கோவையில் அரிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு பின் குழந்தைகள் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை முதல்வர் தகவல் அளித்துள்ளார்.

Update: 2024-05-10 17:49 GMT

அரிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 

கோவை மாவட்டம், பல்லடம் பகுதியை சேர்ந்த 3 மாத குழந்தை சுமார் 10 நாட்களாக தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் பல்வேறு விதமான ஆண்டிபயோட்டிக் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தையின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதில் குழந்தைக்கு காவசாகி என்ற அரியவை நோய் கண்டறியப்பட்டது.

இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கடும் தொடர் காய்ச்சல்,கை கால் வீக்கம்,தோல் உரிவது, நெரி கட்டுவது போன்ற அறிகுறிகள் தென்படும். பின்னர் இதயத்தையும், ரத்த நாளங்களையும் பாதிக்க கூடிய இந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்காத பட்சத்தில் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த இம்யுனோ குளோபுலின் என்ற மருந்து செலுத்தப்பட்ட பிறகு காய்ச்சல் குறைந்து நல்ல உடல்நலத்துடன் குழந்தை வீடு திரும்பியது. இது குறித்து அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், கடந்த ஒரு வார காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான மருந்துகள் செலுத்தப்பட்ட காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார்.

தமிழக அரசின் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த மருந்துகள் பெறப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகள் காப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 8 குழந்தைகளுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டு, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News