ஏலச்சீட்டு நடத்தி மோசடி - ஆசிரியர் கைது!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-26 07:48 GMT

பைல் படம் 

திருவண்ணாமலை மாவட்டம் இசுக்கழி காட்டேரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் உண்ணாமலை என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அதே ஊரில் மணிவண்ணன் என்பவர் உண்ணாமலையிடம் 2 வருடமாக ஏல சீட்டு கட்டி வந்தார். இந்த நிலையில் பணத்தை எடுத்துக்கொண்டு உண்ணாமலை தலைமறைவாகி விட்டார். மணிவண்ணன் காவல் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் உண்ணாமலையை கைது செய்தனர். மேலும்,விசாரித்ததில் உண்ணாமலை 20 பேரிடம் பணம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
Tags:    

Similar News