சோழவந்தான் பகுதியில் சித்திரை திருவிழா திருக்கல்யாண தேரோட்டம்

கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர், முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

Update: 2024-04-24 11:55 GMT

திருக்கல்யாண தேரோட்டம்

சோழவந்தான் அருகே தென்கரை அய்லாண்டேஸ்வரி அம்மன் சமேத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சியை முன்னிட்டு தேரோட்ட திருவிழா நடந்தது விழாவை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத சுவாமி தேரில் வலம் வந்தனர் சுவாமியையும் அம்பாலையும்வரவேற்று அர்ச்சனை பூஜைகள் செய்தனர் பக்தர்களுக்கு நீர் மோர் அன்னதானம் வழங்கினர் வழி நெடுக வாழைப்பழம் மற்றும் மாம்பழம் சூறையிட்டனர் விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.கோவில் அர்ச்சகர் செந்தில்குமரேசன் தீபாராதனை மற்றும் மகா தீபாரதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி, கோவில் பணியாளர்கள் மணி, நித்தியா, ஜனார்த்தனன் உள்பட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர், முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்
Tags:    

Similar News