கள்ளக்குறிச்சியில் கிறிஸ்மஸ் பண்டிகை வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-12-26 05:32 GMT

சிறப்பு பிரார்த்தனை 

கள்ளக்குறிச்சி ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தா ஆலயத்தில்  நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பலி நடந்தது. ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசுவை எழுந்தருளச் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். வழிபாட்டினை தேவாலய போதகர் தங்கதுரை செய்து வைத்தார். இதேபோன்று, நேபால் தெரு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் கன்னிமரியாள், சூசையப்பர், குழந்தை இயேசு, மூன்று ஞானிகள், ஆடு மேய்ப்பர் ஆகியோரை ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் எழுந்தருளச் செய்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
Tags:    

Similar News